நாட்டில் நேற்று (13) ஆபத்தான 12 வீதி விபத்துக்கள் நேற்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் பெச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றைய விபத்துக்கள் காரணமாக 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஏற்கனவே இடம்பெற்ற வீதிவிபத்துகளில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வந்த 5 பேரும் நேற்று மரணித்தனர்.
இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக தினசரி ஏழு முதல் எட்டு பேர் வரை மணித்து வந்தனர். எனினும், இது அண்மைக்காலத்தில் 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று மரணித்த மூன்று பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்., நான்கு பாதசாரிகளும் காயங்களுக்கு ஆளானகினர்.
பொதுமக்கள் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டுமென அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1