கல்வியமைச்சிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய மாணவி… 186வது அழைப்பிலேயே பதில் கிடைத்தது!

Date:

பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மாணவியொருவர், 186வது முயற்சியில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட தகவல் கிடைத்துள்ளது.

அநுராதபுரத்தை சேர்ந்த மாணவியொருவர் அவசரத் தேவை குறித்த தகவல்களைப் பெற பத்தரமுல்லை கல்வி அமைச்சகத்திற்கு (இசுருபயா) நேற்று (12) காலை முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

காலை 9 மணிக்கு முயற்சியை ஆரம்பித்தார். ஆனால் பதிலில்லை. அவசர தேவை கருதி முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து முயற்சித்தார்.

அவர் 185 முறை முயற்சித்தும் பலனிருக்கவில்லை. யாரும் பதிலளிக்கவில்லை. மதியம் 1.30 மணியளவில் 186வது முறையில்தான் பதிலளிக்கப்பட்டது.

பொதுச்சேவைகளின் நிலைமையை இந்த சம்பவத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியுமென சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்