இலங்கையில் COVID-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 297 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய 236 பேரும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து 55 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 397 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,958 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் 2,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 372 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.



