இலங்கையின் தேசியக்கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிகளை சீன நிறுவனமொன்று தயாரித்த விடயம் சர்ச்சையானதையடுத்து, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த உற்பத்தி நிறுவனத்தை தொடர்புகொள்ள, சீன தூதரகத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்தது.
இந்த நிலையில் சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,
“தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்திற்கு கவலை
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தயாரிப்புகளை அமேசனில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள். இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கண்ணியம் என்பவற்றிற்காக பல தசாப்தங்களாக சீனா ஆதரவளித்து வருகிறது“ என சீன தூதரகம் ருவிட் செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1