கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது சனிடைசர் வீச்சு: தாய்லாந்து பிரதமர் சண்டித்தனம்!

Date:

பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் மீது சனிடைசரை அடித்த தாய்லாந்து பிரதமர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிக்காக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளிக்காமல், ‘வேறு எதாவது கேள்வி உள்ளதா? எனக்கு தெரியாது. நான் இன்னும் அதனை காணவில்லை. இதை தான் ஒரு நாட்டின் பிரதமர் முதலில் தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமா’ என்று கேட்ட பிரயூத் சான் ஓச்சா, பத்திரிகையாளர்களை நோக்கி சனிடைசரை தெளித்தார்.

இந்த நிகழ்வுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களை கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்