நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களற்கு பார்வையாளர்கள் சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்ஃபி எடுத்தமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சிறை ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது நான்கு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருண தன்னுடன் தொலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1