பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தகோபால் பாக்லே மஹா சிவராத்திரி நாளான இன்று (11) காலையில் மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்திற்கு வருகை தந்து இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வரும் கருங்கல் சிற்ப வேலைகளையும் இதர வேலைகளையும் பார்வையிட்டதோடு வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.



