மேல் மாகாணத்தில் 5,11,13ஆம் தரங்களிற்கு திங்கள் முதல் பாடசாலை ஆரம்பம்!

Date:

மேல் மாகாணத்தில் 5, 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களிற்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும், பிற தரங்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் திங்களன்று மீண்டும் தொடங்கப்படாது.

மேல் மாகாணத்தைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 திங்கள் அன்று அனைத்து தரங்களுக்கும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று அறிவித்தார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து மேலும் விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தில் பாடசாலைகள் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும்  மாணவர்களுக்கு மட்டுமே கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்