கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற யுவதியின் சடலம், குருவிட்ட பகுதியில் காணாமல் போன யுவதியினுடையதே என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
குருவிட்டவில் காணாமல் போன 30 வயதான யுவதியின் தாய், சகோதரனிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளும், டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தின் மரபணு மாதிரிகளும் ஒத்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், யுவதியின் தலை இதுவரை மீட்கப்படவில்லை.




