முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

Date:

சர்வதேச மகளிர் தினமான இன்று (08)முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால் இந்த அரசாங்கம் அதற்கான எந்தவித பதிலையும் வழங்கவில்லை என தெரிவித்து மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்கின்ற நீதியான விடயங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்

இந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரம் பகுதியில் நிறைவடைய இருக்கின்றது. எனவே தமது நாளைய போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்