Pagetamil
கிழக்கு

கூட்டமைப்பை கெட்ட வார்த்தையால் திட்டிய பிள்ளையான் குழு பீதாம்பரம் வெளியேற்றம்!

வாழைச்சேனை பிரதேசசபை அமர்வில் கெட்ட வார்த்தைகள் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பீதாம்பரம் சபையை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வாழைச்சேனை பிரதேசசபையின் 37வது மாதாந்த அமர்வு இன்று (8) இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த விநாயகர்புரம் வட்டார உறுப்பினரான பீதாம்பரம் என அழைக்கப்படும் சீனித்தம்பி தர்மலிங்கம் கெட்ட கெட்ட வார்த்தைகள் பாவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை திட்டினார்.

அவர் அநாகரிகமாக நடந்து கொள்வதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தவிசாளர் சோபா ரஞ்சித் அதை ஏற்கவில்லை. அவர் பீதாம்பரத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கி.சேயோன், அநாகரிகமாக நடந்த உறுப்பினரை வெளியேற்ற வேண்டுமென தீர்மானம் ஒன்றை முன்வைத்தார். எதிர்த்தரப்பிலேயே பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்ததால், வேறு வழியின்றி பீதாம்பரத்தை சபை அமர்விலிருந்து தவிசாளர் வெளியேற்றினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!