பொகவந்தலாவை லெச்சுமி தோட்ட கீழ்ப்பிரிவு கோவிலில் 200 வருட பழமைவாய்ந்த கத்தியொன்று காணாமல் போயுள்ளதாக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவில் திருவிழாவை நடத்துவதுத் தொடர்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு குறித்த கத்தி காணாமல் போயுள்ளதாக தோட்ட மக்கள் கூறுகின்றனர்.
கத்தி கிடைக்கும்வரை பணிக்குச் செல்லப்போவதில்லை கூறும் தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.




