அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தல் அபாயத்தை சந்தித்துள்ள இலங்கை தமிழ் அகதிக்குடும்பமான நடேசன்- பிரியா தம்பதிக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 5ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் ஒன்றுகூடிய அவுஸ்திரேலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.
நடேசன் -பிரியா தம்பதியருடன் அவர்களது மகள்களான 5 வயது கோபிகா, 3 வயது தரணிகா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவித்து அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதி வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பிரஸ்பன் நகரில் உள்ள கிங் ஜோர்ஜஸ் சதுக்கத்தில் அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடினர்.



