Pagetamil
இலங்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடுகளை உறுதிசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

இலங்கை மீது வாக்கெடுப்புடன் புதிய தீர்மானம் எடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஐ.நா அறிக்கை   2009 மே 18 ஆம் திகதி முடிவடைந்த மோதலில் கவனம் செலுத்தும். பெரும்பாலும் ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியது.

புலிகள் தலைவரான குமரன் பத்மநாதன் உட்பட 12,600 கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போலவே,  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதனை வெளிப்படையாக மேற்கொள்வதுடன், அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Pagetamil

ட்ரம்ப் விதித்த அதிக வரி: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

Pagetamil

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 4 பேர் பலி

Pagetamil

சிஐடியில் மைத்திரி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!