தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

Date:

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடுகளை உறுதிசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

இலங்கை மீது வாக்கெடுப்புடன் புதிய தீர்மானம் எடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஐ.நா அறிக்கை   2009 மே 18 ஆம் திகதி முடிவடைந்த மோதலில் கவனம் செலுத்தும். பெரும்பாலும் ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியது.

புலிகள் தலைவரான குமரன் பத்மநாதன் உட்பட 12,600 கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போலவே,  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதனை வெளிப்படையாக மேற்கொள்வதுடன், அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்