நேற்றைய தொற்றாளர் விபரம்!

Date:

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இலங்கையில் நேற்று 460 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.

நேற்று இரத்தினபுரி மாவட்டத்தில் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 32 பேர் எம்பிலிப்பிடியவிலிருந்தும், 14 பேர் எஹெலியகொடவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து 59 தொற்றாளர்களும், கம்பஹாவிலிருந்து 51 தொற்றாளர்களும், கண்டியில் இருந்து 50 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர்.

கொழும்பிலிருந்து 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 19 மொரட்டுவவிலிருந்தும், 8 பேர் மகரகமவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

மாத்தறையிலிருந்து 35 தொற்றாளர்கள், காலியில் இருந்து 21 தொற்றாளர்கள், அனுராதபுரத்திலிருந்து 18 தொற்றாளர்கள், குருநாகலிருந்து 17 தொற்றாளர்கள், பதுளையிலிருந்து 16 தொற்றாளர்கள் மற்றும் நுவரெலியாவிலிருந்து 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 10 தொற்றாளர்கள், களுத்துறையிலிருந்து 9 தொற்றாளர்கள், கேகாலையிலிருந்து 7 தொற்றாளர்கள், மாத்தளை, வவுனியா மற்றும் புத்தளத்திலிருந்து தலா 3 தொற்றாளர்கள், அம்பாறை, பொலன்னறுவையிலிருந்து தலா 2 தொற்றாளர்கள், திருகோணமலை, மன்னார், மொனராகலையிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 35 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்