சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகளை மதிப்பிட ஜனாதிபதி ஆணைக்குழு!

Date:

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்து, அதன் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுங்கத்திணைக்களத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வது மற்றும் சுங்கத்திற்கு எதிரான முறைகேடுகளைத் தடுப்பது, திறமையான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்குவது குறித்த பரிந்துரைகளை வழங்குவது ஆணைக்குழுவின் பணியாகும்.

சுங்க தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வது உட்பட பொதுமக்கள் மற்றும் பிற தரப்புக்களின் கருத்துக்களை கேட்கவும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரன் குணரத்ன தலைமை தாங்குகிறார். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, உயர் நீதிமன்ற நீதிபதி டமித் தொட்டவத்த, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் கே.எம்.எம் சிறிவர்தன, மூத்த ஆலோசகர் சனத் ஜெயநெத்தி மற்றும் இலங்கை சுங்க முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பி.ஏ. டயஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதும், அரச சேவையை வினைத்திறனுடையதாக்கப் போவதாக குறிப்பிட்டு, தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தப்பது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்