வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

Date:

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மன்னாரை சேர்ந்தவர்.

யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 5 பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரும் அடங்குகிறார்.

ஏனைய 4 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். அண்மையில் சிறைக்குள் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் இரண்டு பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மையில் புத்தளத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் அங்கு மரணவீடொன்றிற்கு வந்து சென்றதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் இரண்டு பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில்...

சட்டவிரோத சொத்து குவிப்பு: யாழில் விற்பனை நிலையத்தில் சோதனை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின்...

வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் சிரிய தலைவர்!

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்