யாழில் சூட்சும கொள்ளையர்கள் சிக்கினர்!

Date:

ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி வீதியோரத்தில் நின்று பணத்தை சூட்சுமமாக முறையில் வசூலித்து வந்த குழுவை நாவற்குழி இளைஞர்கள் மடக்கியப் பிடித்துள்ளனர்.

நேற்று இரவு 07:30 மணியளவில் இச்சம்பவம் நாவற்குழிப் பாலத்திற்கும் யாழ் வரவேற்பு வளைவுக்குமிடையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நாவற்குழிப் பாலத்தருகே குறித்த குழுவொன்று மாலை நேரங்களில் ஆட்டோவை நிறுத்தி வைத்து, வீதியால்ப் போய் வருவோரை மறித்து ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி பணம் மற்றும் பெற்றோலை சூட்சுமமாக கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்சியாக அவதானித்து வந்தவர்கள் இளைஞர்களிடம் கூறியுள்ளனர், இதனையடுத்து நாவற்குழி இளைஞர்கள் குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை அவதானித்து, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்திருந்த நிலையில்,சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இளைஞர்கள் தகவலை வழங்கியதையடுத்து பொலிஸார் வருகைதந்தனர்,

குறித்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மகனின் தலைமைத்துவ திறனில் சந்தேகம் கொண்டிருந்த அலி கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி தனது மகன் மொஜ்தபா...

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்