ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தொடக்க உரையில் ‘இலங்கையை காணோம்’!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும், அவரது உரையில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறுகிறது. பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தொடக்க உரையாற்றிய போது,

பலத்தை பயன்படுத்துதல், விமர்சகர்களை சிறைக்கு அனுப்புதல், பொது சுதந்திரங்களுக்கு சட்டவிரோதமான கட்டுப்பாடுகள் மற்றும் மீறல் அவசரகால அதிகாரங்கள் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவராது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, ஒரு பொது சுகாதார நெருக்கடியை நிர்வகிக்க சமூகங்களின் பின்னடைவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திய சம்பவங்களை உலகம் ஒப்புக் கொண்டு சரிசெய்ய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் தூதர் கூறினார்.

தொற்றுநோய்க்கு பிந்தைய உலகத்தை மீண்டும் கட்டியெழுப்பும்போது ஒவ்வொரு விதமான பாகுபாடுகளையும் அகற்றுமாறு பேசலெட் அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

“விலையுயர்ந்த, அவமானகரமான, கொள்கை ரீதியான மற்றும் முற்றிலும் எதிர் உற்பத்தி முறைகள் மற்றும் ஒரே மாதிரியானவை, அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அநீதியை உருவாக்குகின்றன, மேலும் பெண்கள், இன, மத அல்லது சாதி சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் தங்கள் உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் சமூகங்களுக்கு பங்களிப்பதைத் தடுக்கின்றன,” என்று அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானமொன்றை போரம் ஏஷியா, சி.ஜே.ஏ, சி.பி.ஏ, சி.பி.ஜே, எச்.ஆர்.டபிள்யூ, பேர்ள் உள்ளிட்ட அமைப்புகள் கோரியுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர்கள் மீது குறிப்பிட்டதொரு கவனத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் நீதியைப் பாதுகாப்பதற்காக, சர்வதேச உறுதிப்பாடொன்றுக்காக, மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் பலமான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு, மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தாங்கள் வலியுறுத்துவதாக குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் இவ்வாண்டு ஜனவரி மாத அறிக்கையில், இம்மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் சிறப்பு பத்து நடைமுறை ஆணைகளின் இணைந்த மதிப்பீட்டில், இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

தவிர, போர் முடிந்து ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் பொறுப்புக்கூறலுக்கான, நல்லிணக்கத்துக்கான உள்ளூர் முன்னெடுப்புகள், முடிவுகளை அளிக்க மறுத்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கோடிட்டுக் காட்டியுள்ளதாக இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில், இணங்கிய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில், இலங்கை அரசாங்கம் தவறிய நிலையில், இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அவசியம் காரணமாக, புதிய தீர்மானமொன்று உடனடியாக, கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் சுயாதீன சர்வதேச நடவடிக்கைகள் தேவை எனவும் குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்