அவுஸ்திரேலியன் ஓபனில் 9வது முறையாக ஜோக்கோவிச் சம்பியன்: 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்!

Date:

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தவை வீழ்த்தி ஜோக்கோவிச் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் வன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதிஆட்டத்தில் முதல் செட்டே இருவருக்கும்இடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிச் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஜோக்கோவிச் 9வது அவுஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3வது முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார். ஜோக்கோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமைந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3வது இடத்தில் உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்