சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது!

Date:

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார்.

மாவனெல்லை, ஹிங்குல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், சஹ்ரான் ஒரு குழுவினரை தீவிரவாத அமைப்புக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, இதுபோன்ற 6 பெண்கள் டிசம்பர் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித...

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்