சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது!

Date:

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார்.

மாவனெல்லை, ஹிங்குல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், சஹ்ரான் ஒரு குழுவினரை தீவிரவாத அமைப்புக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, இதுபோன்ற 6 பெண்கள் டிசம்பர் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்