அமைச்சரின் வாகனம் அடிபட்டது!

Date:

இன்று (20) காலை சிலாபம்- ஆனமடுவ வீதியில் பல்லம-செருகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தோட்டத் தொழில் துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் கிராம மக்களுடனான கலந்துரையாடலிற்காக கருவலகசெவ, நெலுமக பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.

ஆனமடுவ- சிலாபம் வீதியில் செருகல வளைவுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சொகுசு ஜீப் சாலையில் இருந்து விலகி மரத்தில் மோதியது.

விபத்துக்குப் பின்னர் இலேசான காயமடைந்த இராஜாங்க அமைச்சர் மற்றொரு வாகனத்தில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்