29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

மணிவண்ணனிடமும் வாக்குமூலம்: சிங்கள மொழி பிரதியில் கையொப்பமிட மறுத்தார்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

யாழ் மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார் வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர்.

வாக்குமூலத்தை சிங்களத்தில் பதிவு செய்த பின்னர் அதில் மணிவண்ணனை கையொப்பமிட பொலிசார் கேட்டபோது, தனக்கு சிங்கள மொழி தெரியாதென தெரிவித்த மணிவண்ணன், தெரியாத மொழியில் உள்ள ஆவணத்தில் கையொப்பமிட முடியாதென மறுத்து விட்டார்.

தமிழில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டால் கையொப்பமிடுவேன் என்றார்.

இதையடுத்து, அந்த ஆவணத்தை தற்போது பொலிசார் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!