எனது முடிவிற்கு யாரும் காரணமல்ல: டிக்டொக் பிரபலம் எடுத்த விபரீத முடிவு!

Date:

டிக்டொக்கில் சூப்பர் பிரபலமான தசாரியா க்வின்ட் நோயஸ் -Dazhariaa Quint Noyes (18) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மிக சிறிய வயதலேயே டிக்டொக்கில் உச்ச புகழடைந்த அவரை, Dee என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.

கடந்த 8ஆம் திகதி டீ இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது தான் தன் கடைசி போஸ்ட் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அவர் சந்தோஷமாக பாடி, டான்ஸ் ஆடியிருந்தார்.

இந்நிலையில் தசாரியா தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தை ரஹீம் அல்லா டிக்டொக்கில் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவை பார்த்த தசாரியாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி போஸ்ட் என்று சொல்லி வெளியிட்ட வீடியோவில் கூட சந்தோஷமாகத் தானே இருந்தார், ஏன் இப்படி அவசரப்பட்டுவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தசாரியாவின் இந்த முடிவுக்கு அவரின் காதலர் மைக் தான் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் தான் தசாரியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிக்டொக்கில் வெளியிட்டு உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார் மைக்.

அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், தசாரியாவின் முடிவுக்கு மைக் காரணமாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். தன் முடிவுக்கு மைக் காரணம் இல்லை என்று தசாரியா கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மேலும் இந்த முடிவுக்கு பாட்டியும் காரணம் இல்லை என்பதை அவரிடம் தெரிவிக்கவும் என தசாரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்