கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Date:

“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை இப்படி கண்டித்துள்ளார், ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர் நிமல் சிறிபால  சில்வா.

இதில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவருடன், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்டரீதியில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரானவன். அதை விடுங்கள். ஆனால், அந்த மக்கள் நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பினர் அதற்கு பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டுமல்லவா. கூட்டமைப்பிற்குள் இவ்வளவு பிரச்சனை வருவது நல்லதல்ல. அந்த மக்களிற்காக இதை சொல்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

உடைப்பது, பிரிப்பது, குழப்புவதே எமது தாரக மந்திரம் என குழம்பிப் போயுள்ள கூட்டமைப்பினர் திருந்துவார்களா?

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்