கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Date:

“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை இப்படி கண்டித்துள்ளார், ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர் நிமல் சிறிபால  சில்வா.

இதில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவருடன், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்டரீதியில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரானவன். அதை விடுங்கள். ஆனால், அந்த மக்கள் நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பினர் அதற்கு பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டுமல்லவா. கூட்டமைப்பிற்குள் இவ்வளவு பிரச்சனை வருவது நல்லதல்ல. அந்த மக்களிற்காக இதை சொல்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

உடைப்பது, பிரிப்பது, குழப்புவதே எமது தாரக மந்திரம் என குழம்பிப் போயுள்ள கூட்டமைப்பினர் திருந்துவார்களா?

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்