கட்சியின் கோபக்காரர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது: கஜேந்திரன் ‘குபீர்’ உத்தரவு!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்ட யாருடனும் கதைக்கக் கூடாதென, முன்னணியின் உறுப்பினர்களிற்கு கண்டிப்பான கட்டளை வழங்கியுள்ளார் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

இந்த உத்தரவினால், உறுப்பினர்கள் பலர் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரையே, முன்னணி கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுத்தது. அதற்கு நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.

அவர்கள் மணிவண்ணனை ஆதரித்தார்கள் என்ற காரணத்தினாலேயே கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இதுவரை கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள், அரசியலுக்கு அப்பாலும் நட்பாக இருப்பவர்கள் தமக்குள் நட்புறவை பேணுவது வழக்கம். அப்படி பல உறுப்பினர்கள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மணிவண்ணன் அணியும் கலந்து கொண்டது. கஜேந்திரர் அணி பக்கமுள்ள ஒருவரும் கலந்து கொண்டார். நீணடநாள் நட்பின் அடிப்படையில், அவர் பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டார்.

நீண்டநாள் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

கட்சியில் அங்கம் வகிப்பதென்றால், கட்சி கதைக்காமல் விடுபவர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது என கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளார்.

“நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவெடுங்கள்“ என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்