கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Date:

“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை இப்படி கண்டித்துள்ளார், ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர் நிமல் சிறிபால  சில்வா.

இதில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவருடன், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்டரீதியில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரானவன். அதை விடுங்கள். ஆனால், அந்த மக்கள் நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பினர் அதற்கு பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டுமல்லவா. கூட்டமைப்பிற்குள் இவ்வளவு பிரச்சனை வருவது நல்லதல்ல. அந்த மக்களிற்காக இதை சொல்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

உடைப்பது, பிரிப்பது, குழப்புவதே எமது தாரக மந்திரம் என குழம்பிப் போயுள்ள கூட்டமைப்பினர் திருந்துவார்களா?

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்