கிளிநொச்சி விபத்தில் குடும்பப் பெண் பலி

Date:

கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் வசித்த 40 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 09 ஆம் திகதி வைத்தியசாலை செல்வதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...

லெபனானில் உள்ள இலங்கைப் பெண்ணை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்