கொக்குவிலில் சடலம் மீட்பு

Date:

மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று (11) சவுக்கடி கடற்கரை பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக, பொது மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிசாரையும் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது உயிரிழந்தவர் செலுத்தியதாக கூறப்படும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான வழிகளை பென்டகன்...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்