நீதிமன்ற உத்தரவால் சாவகச்சேரி நகரசபையில் சிக்கல்: இரு அணிகளும் சமபலம்!

Date:

சாவகச்சேரி நகரசபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வசிக்காத காரணத்தால், அவர் நகரசபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணியும், இலங்கை தமிழரசு கட்சி அணியும் தலா 7 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலைமையேற்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிகாரத்தை கைப்பற்றும் தரப்பை தீர்மானிக்க நாணயச்சுழற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்