நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

Date:

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் தலைவர் யூ. கே. சேமசிங்க, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே தற்போது ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உரிய கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் அவசியம் என்றும், பச்சை அரிசியின் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய அரசாங்கம் முறையான திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த போகத்திற்கு முன்னதாக நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிப்பதன் மூலம் நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என யூ. கே. சேமசிங்க தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்