நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

Date:

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் தலைவர் யூ. கே. சேமசிங்க, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே தற்போது ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உரிய கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் அவசியம் என்றும், பச்சை அரிசியின் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய அரசாங்கம் முறையான திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த போகத்திற்கு முன்னதாக நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிப்பதன் மூலம் நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என யூ. கே. சேமசிங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்