கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பேர் இடமாற்றம்!

Date:

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பொலிசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில், கோப்பாய் பொலிசாரால் வாகனத்தில் கடத்தி தாக்கப்பட்டதாக இளைஞன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து, அது தொடர்பில் திணைக்கள விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளிற்கு இடையூறு ஏற்படக்கூடாதென்பதற்காக உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்