இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களில் 95% க்கும் மேற்பட்டவர்களிற்கு கொரோனாவிற்கு எதிரான நோயொதிர்ப்பு சக்தியை (antibodies) உருவாக்கியதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை ஆய்வாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மற்றும் மருத்துவத் துறையின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு, சினோபார்ம் தடுப்பூசிக்கான நோயெதிர்ப்பு பிரதிபலிப்புக்களை ஆராய்ந்ததில் இது தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய 95% க்கும் மேற்பட்ட நபர்களில் நோயெதிர்ப்ர் சக்தியை தூண்டியது கண்டறியப்பட்டது, COVID-19 நோயைத் தொடர்ந்து இயற்கையான காணப்படும் அளவைப் போன்று, தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியை தூண்டியுள்ளது.
இந்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
டெல்டா மற்றும் பீட்டாவிற்கான நோயெதிர்ப்பு சக்தி அளவுகள், இயற்கையாக தொற்றுநோயைத் தொடர்ந்து வரும் நிலைகளுக்கு ஒத்ததாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இருப்பினும் ஆல்பாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி அளவுகள் குறைவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.




