இலங்கையில் சினோபார்ம் செலுத்திய 95 வீதமானவர்களிற்கு நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாம்!

Date:

இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களில் 95% க்கும் மேற்பட்டவர்களிற்கு கொரோனாவிற்கு எதிரான நோயொதிர்ப்பு சக்தியை (antibodies) உருவாக்கியதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை ஆய்வாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மற்றும் மருத்துவத் துறையின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு, சினோபார்ம் தடுப்பூசிக்கான நோயெதிர்ப்பு பிரதிபலிப்புக்களை ஆராய்ந்ததில் இது தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திய 95% க்கும் மேற்பட்ட நபர்களில் நோயெதிர்ப்ர் சக்தியை தூண்டியது கண்டறியப்பட்டது, COVID-19 நோயைத் தொடர்ந்து இயற்கையான காணப்படும் அளவைப் போன்று, தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியை தூண்டியுள்ளது.

இந்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

டெல்டா மற்றும் பீட்டாவிற்கான நோயெதிர்ப்பு சக்தி அளவுகள், இயற்கையாக தொற்றுநோயைத் தொடர்ந்து வரும் நிலைகளுக்கு ஒத்ததாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இருப்பினும் ஆல்பாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி அளவுகள் குறைவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்