டாவின்சி வரைந்த 500 ஆண்டு பழமையான ஓவியம்; 90 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது!

Date:

டாவின்சி வரைந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகவும் பிரபலமான ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியம் மோனலிசா. இந்நிலையில் லியனார்டோ 2.7 X 2.7 இன்ச் அளவுடைய குறிப்புகள் எழுதக்கூடிய காகிதத்தில் ஒரு ஓவியத்தை வரைந்தார். இது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியமாகும். இது தற்போது சுமார் 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய நாட்டு மதிப்பில் சுமார் 90 கோடி ஆகும்.

லண்டன் இருக்கும் Christie’s என்ற ஏல நிறுவனம் தான் இந்த ஓவியத்தை ஏலத்திற்கு விட்டிருக்கிறது. இதில் லியனார்டோ, கரடி ஒன்றின் தலையை வரைந்திருக்கிறார். இதனை சில்வர் பாயிண்ட் என்ற தொழிநுட்பத்தில் வரைந்திருக்கிறார். இவரின் ஓவிய ஆசிரியரான ஆண்ட்ரே, கற்றுக்கொடுத்த கலை தான் அது. இறுதியாக லியனார்டோவின் ஓவியம் 20 வருடங்களுக்கு முன்பு ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்