கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணியை வீழ்த்தி, கொலம்பியா அணி 3வது இடத்தை பிடித்தது.
47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகள் முன்னேறிய நிலையில், 3வது இடத்திற்காக கொலம்பியா மற்றும் பெரு அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற்றது.
ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. இதனால் ஆட்டம் பெனால்டி சூட்டிற்கு நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கொலம்பிய வீரர் லூயிஸ் டியாஸ் கோல் அடிக்க, 3 – 2 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.




