பொதுஜன பெரமனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை பெயரிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வர்த்ததானி அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.
ஜெயந்த கொட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயரை, பொதுஜன பெரமுன நேற்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்த்தது.
பசில் நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



