இரண்டு டிப்பர் வாகன சாரதிகள் நடுவீதியில் அருகருகாக வாகனங்களை நிறுத்தி விட்டு, உரையாடிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்திற்குள்ளானது.
கடந்த 16ஆம் திகதி, கிண்ணியா- முனைச்சேனை பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அருகிலுள்ள சி.சி.டி.வி கமராவால் பதிவான காட்சிகளில், எதிரெதிரே வந்த இரண்டு டிப்பர் வாகனங்கள், நடுவீதியில் அருகருகாக நிறுத்தப்பட்டு, சாரதிகள் உரையாடுவது தெரிந்தது.
அப்போது, வீதியின் இடதுபுறமாக- பின் பக்கத்தால் வந்த டிப்பர், வீதியில் நடுப்பகுதிக்கு சென்று, அந்த டிப்பர்களில் ஒன்றுடன் மோதியது.
இலங்கையில் பாரவூர்தி ஓட்டுனர்கள் வீதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அரட்டையடிப்பது புதியதல்ல. ஆனால் இந்த விபத்து ஒரு மார்க்கமாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/1895644790749693/videos/597482401228811




