ஒரு மார்க்கமான விபத்து: சிசிரிவி காட்சி!

Date:

இரண்டு டிப்பர் வாகன சாரதிகள் நடுவீதியில் அருகருகாக வாகனங்களை நிறுத்தி விட்டு, உரையாடிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்திற்குள்ளானது.

கடந்த 16ஆம் திகதி, கிண்ணியா- முனைச்சேனை பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகிலுள்ள சி.சி.டி.வி கமராவால் பதிவான காட்சிகளில், எதிரெதிரே வந்த இரண்டு டிப்பர் வாகனங்கள், நடுவீதியில் அருகருகாக நிறுத்தப்பட்டு, சாரதிகள் உரையாடுவது தெரிந்தது.

அப்போது, வீதியின் இடதுபுறமாக- பின் பக்கத்தால் வந்த டிப்பர், வீதியில் நடுப்பகுதிக்கு சென்று, அந்த டிப்பர்களில் ஒன்றுடன் மோதியது.

இலங்கையில் பாரவூர்தி ஓட்டுனர்கள் வீதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அரட்டையடிப்பது புதியதல்ல. ஆனால் இந்த விபத்து ஒரு மார்க்கமாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/1895644790749693/videos/597482401228811

spot_imgspot_img

More like this
Related

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்