நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தேசிய வீதத்தை விட வட மாகாணத்தினதும், யாழ் மாவடடததினதும் வீதங்கள் அதிகமானவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நேற்றும் 55 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன. இதில் 23 பெண்களும், 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். நாட்டில் இதுவரை 2,480 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் 0.9 ஆகும்.
நேற்று வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 63 ஆகும். இது 1.6 வீதமாகும்.
வட மாகாணத்தின் இறப்பு வீதம் 1.4 ஆகும்.




