ஐ.நா. பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு!

Date:

சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய 3 பரிமாணங்களில் நீடிக்கத்த்தக்க வளர்ச்சியை மேம்படுத்த ஐ.நா சபையின் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

54 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த கவுன்சில் ஐ.நா. அமைப்பின் இதய பகுதியாக கருதப்படுகிறது.

மேலும் ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறும் உச்சி மாநாடுகள் மற்றும் இதர மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த நிலையில் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்துக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. இதே பிரிவில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் தேர்வு செய்யப்பட்டன.

இதனிடையே ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியாவை தேர்வு செய்ததற்காக ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்