அதிவேகத்தால் வினை: எழுதுமட்டுவாளில் தடம்புரண்ட வாகனம்; 7 பேருக்கு நேர்ந்த கதி!

Date:

எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்தை சேர்ந்த 7 பேரே காயமடைந்துள்ளனர்.

இன்று காலை கொடிகாமத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வடி வாகனமொன்றில் மேசன் வேலைக்காக அவர்கள் சென்றனர்.

அதிவேகமாக சென்ற வாகனம், எழுதுமட்டுவாளில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் திடீரென பிரேக் பிடித்த போது, வாகனம் தடம்புரண்டது. இதில் 7 பேர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்திருந்த 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்