ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பங்கேற்க மாட்டார்!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 14ஆவது சீசனில் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் ஐபிஎல் முடிந்தவுடன் டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் செப்டம்பர் மாதத்தில் சில முக்கிய சுற்றுப் பயணங்களில் ஈடுபடவுள்ளன. இதனால், இந்த நாடுகளைச் சேர்த்த வீரர்கள் ஐபிஎலில் பங்கேற்கமாட்டார்கள் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது செய்தி வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய உள்ளூர் பத்திரிகை ஒன்று, “ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பாட் கம்மின்ஸ் பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்” என எழுதியுள்ளது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கம்மின்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளர்கள் பலவீனமாக உள்ளனர். கம்மின்ஸ் மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி அணியை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்ற முயற்சித்து வந்தார். தற்போது அவரும் விலகியுள்ளார். இருப்பினும், மாற்றுப் பந்துவீச்சாளர் பெர்குசன் இருப்பதால் கொல்கத்தா அணிக்குப் பெரிய பாதிப்பு இருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. இதனால் வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டியது எங்களது பணி எனத் தெரிவித்துள்ளது.

“டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி சில முக்கிய சுற்றுப் பயணங்களில் ஈடுபட உள்ளது. இதில் சில வீரர்களுக்குச் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். இதன்மூலம் உலகக் கோப்பையின்போது வீரர்கள் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க முடியும். யார் யாருக்கு எந்தெந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்ற தகவல் விரைவில் வெளியாகும்” எனக் கூறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்