மேலும் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மாத்தளை, ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் உகுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவெந்திர சில்வா தெரிவித்துள்ளார்.




