கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி;அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் பரிந்துரைப்பு!

Date:

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்தத்தில் கருக்கலைப்பு, குறை பிரசவம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே பக்கவிளைவுகள்தான் அப்பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கொரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, தனது "போதைப்பொருள் மீதான போர்"...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்