சந்தையையும் இராணுவத்தினர் மூலம் நடத்த வேண்டி வரலாம்: வவுனியா அரச அதிபர் எச்சரிக்கை!

Date:

சரியான சுகாதாரநடைமுறைகள் பேணப்படாவிடின் சந்தை செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடாத்தவேண்டி வரும் என்று மாவட்ட அரசஅதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.

கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்,

சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வெளிமாவட்ங்களில் இருந்தும் இங்கு வியாபாரிகள் வருகின்றனர். எனவே அந்த இடத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்பிடி நடக்கும் பட்சத்தில் தினச்சந்தை செயற்பாடுகளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாற்ற வேண்டி ஏற்படும்.

அங்கும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதவிடத்து கமநல திணைக்களங்களூடாக இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

எனவே உங்களது ஏனைய உறுப்பினர்களிற்கு கொவிட் தொடர்பான உண்மை நிலையினை எடுத்துச்சொல்லி உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட இடர்பாடுகளிற்கு இடமளிக்க கூடாது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்