இன்டியானா நகர துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

Date:

அமெரிக்காவின் இண்டியானா பொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த நிறுவனத்திற்குள் சப்மெஷின் கன் ஒன்றுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் கண்டறியப்படவில்லை.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்