மியான்மர் ஜனநாயக போராட்டங்களில் இதுவரை 320 பேர் பலி!

Date:

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320- ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ‌இந்த போராட்டத்தை இராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செல்வச்சந்நிதி வருடாந்த மஹோற்சவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 2026ஆம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்  வரலாற்றுச் சிறப்புமிக்க...

மக்கள் சேவையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை முன்னுதாரணமாக செயற்படுகிறது” – எம்.பி. கந்தசாமி பிரபு

மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்