தந்தையை குத்திக் கொன்று விட்டு தலைமறைவான மகன்!

Date:

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய மகனை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலிகுரூப் தோட்டத்தை சேர்ந்த  சரவணமுத்து மகாமுனி (71) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று (15) இரவு 07.30 மணியளவில் தனது வீட்டில் மதுபோதையில் 42 வயதுடைய மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது மகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கத்தி குத்துக்குள்ளான தந்தை அவ்விடத்திலேயே மரணமானார்.

சடலம் நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலும் தலைமறைவான நபரை கைது செய்ய நாவலப்பிட்டி மற்றும் குருந்துவத்தை பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணையில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித...

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்