கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்!

Date:

டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்­க ­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது
செய்­துள்­ள­னர்.

மேன் இன் பிளாக் எனும் அமைப்­பால் ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அதில் ஏறத்­தாழ 1,200 பேர் ஈடு­பட்­ட­தா­க­வும் டென்­மார்க் பொலிஸார் கூறி­னர்.

கொரோனா தடுப்பு கட்­டுப்­பா­டு­களில் பல­வற்றை நீட்­டிப்­ப­தாக டென்­மார்க் அர­சாங்­கம் கடந்த வாரம் அறி­வித்­திருந்தது.

இதை­ய­டுத்து, முடக்கநிலையை எதிர்த்து முதல்­மு­றை­யாக அங்கு ஆர்ப்­பாட்­டம் நடந்துள்ளது. ஆர்ப்­பாட்­டம் பெரும்­பா­லும் அமை­தி­யான முறை­யில் நடத்­தப்­பட்­ட­து. இதில், மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­தற்­கா­வும் சுடர்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் எட்டு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முத­லில் 600 பேர் மட்­டுமே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் ஆனால் மாலை நேரத்­திற்­குள் கோபன்­ஹே­கன் நகர மண்­ட­பத்­துக்கு முன்­பாக 1,000க்கும் மேற்­பட்­டோர் கூடி­ய­தா­க­வும் பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்